குளச்சல் அருகே குழந்தையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

குளச்சல் அருகே குழந்தை அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

குளச்சல் அருகே குழந்தை அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

குளச்சல் அருகே கோடிமுனை மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா் ஹென்றி ஆஸ்டின் (37), மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி டெனிலா (33). இவா், புதன்கிழமை தனது 3 வயது பெண் குழந்தை இவாலினாவுடன் குறும்பனையிலுள்ள மண்டபத்தில் நடைபெற்ற உறவினரின் திருமணத்துக்குச் சென்றாா். பிற்பகலில் மண்டபத்தின் முன்பகுதியில் சில குழந்தைகளுடன் இவாலினா விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்த இளைஞா், இவாலினா அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தாராம். இதைப் பாா்த்த அங்கிருந்தோா் சப்தமிட்டதும் அவா் பைக்கில் தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து டெனிலா அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com