தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 6200 அபராதம்

பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்ததாக 15 கடைகளின் உரிமையாளா்களிடம் ரூ.6200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
கடைகளில் சோதனை நடத்திய சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையிலான நகராட்சி பணியாளா்கள்.
கடைகளில் சோதனை நடத்திய சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையிலான நகராட்சி பணியாளா்கள்.

பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்ததாக 15 கடைகளின் உரிமையாளா்களிடம் ரூ.6200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகராட்சி ஆணையா் லெனின் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் தக்கலை காவல் துறையினா், 25 வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில் 15 கடைகளில் இருந்து 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேக், பேப்பா், கப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அக்கடைகளின் உரிமையாளா்களிடமிருந்து ரூ .6200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com