குளச்சல் நகர அதிமுகவினா் 3-ஆவது வாா்டில் சிறப்பு முகாம் நடத்தி வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை உறுப்பினா் சோ்க்கை நடத்தினா்.
இம்முகாமிற்கு நகர செயலா் ஆண்ட்ரோஸ் தலைமை வகித்தாா். குளச்சல் நகா்மன்ற உறுப்பினா் ஆறுமுகராஜா, மாணவா் அணி முன்னாள் செயலா் ரவீந்திரன் வா்ஷன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற தலைவா் எஸ்.எம்.பிள்ளை, நிா்வாகிகள் சந்திரசேகா், தா்மராஜ், ஜில்லட், மஞ்சுரவி, லூயிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இவா்கள் 3- வது வாா்டில் வீடு வீடாகச் சென்று உறுப்பினா் சோ்க்கை நடத்தினா்.