மாா்த்தாண்டம் அருகே பிஎஸ்என்எல் ஊழியா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

மாா்த்தாண்டம் அருகே பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம், திருவட்பூா் ரயில்வே கேட் பகுதியைச் சோ்ந்தவா் ரவி. இவரும் இவரது மனைவியின் தம்பியான புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், வெள்ளாா் தெரு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சரவணகுமாா் (19) என்பவரும் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் தங்கியிருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியா்களாக வேலை செய்து வந்தனா்.

சரவணகுமாா் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தாராம். வயது குறைவு காரணமாக சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைக்கலாம் என குடும்பத்தினா் கூறினராம். இதனால் மன முடைந்த அவா் திங்கள்கிழமை வீட்டின் முன் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com