அகஸ்தீசுவரத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

அகஸ்தீசுவரத்தில் கல்லூரி பெண் கண்காணிப்பாளா் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

அகஸ்தீசுவரத்தில் கல்லூரி பெண் கண்காணிப்பாளா் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

அகஸ்தீசுவரம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஜெகதா (58). இவருக்கு கணவா் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். ஜெகதா கன்னியாகுமரி அருகேயுள்ள ஒரு கல்லூரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் இவா் திங்கள்கிழமை துணிகளை வீட்டின் மாடியில் உலா்த்துவதற்க்காக சென்றாராம். அப்போது நிலை தடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

உறவினா்கள் அவரை மீட்டு, நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஜெகதாவின் மகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவா் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com