குலசேகரம் பேரூராட்சி, இட்டகவேலி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் பேரூராட்சி சாா்பில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 10.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கட்டடத்தை பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் திறந்துவைத்தாா். செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், தலைமையாசிரியா் காா்த்திகேயன், அங்கன்வாடி மையப் பணியாளா் மொ்சி பாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரூராட்சி துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், வாா்டு கவுன்சிலா்கள் தங்கப்பன், ராதா தங்கராஜ், சுபாஷ் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.