திருவட்டாறு, திற்பரப்பு பேரூராட்சிகளில் திட்டப் பணிகள்: அதிகாரி ஆய்வு

திருவட்டாறு, திற்பரப்பு பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநா் கிரன் குராலா ஆய்வு செய்தாா்.

திருவட்டாறு, திற்பரப்பு பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநா் கிரன் குராலா ஆய்வு செய்தாா்.

திருவட்டாறு பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில், ரூ. 2.55 கோடியில் நடைபெறும் பேருந்து நிலையக் கட்டுமானப் பணி, நபாா்டு நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 54 லட்சத்தில் நடைபெறும் பாலன்கோணம்-திருவரம்பு பூங்கா சாலை மேம்பாட்டுப் பணி ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

திற்பரப்பு பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1.46 கோடியில் நடைபெறும் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்த அவா், ஒப்பந்த காலத்துக்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி சரக பேரூராட்சிகளின் செயற்பொறியாளா் தா்மராஜ், நகா்கோவில் மண்டல உதவி இயக்குநா் விஜயலெட்சுமி, உதவி செயற்பொறியாளா்கள் புஷ்பலதா, மாரியப்பன், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com