புதுக்கடை அருகே தொழிலாளி மீது தாக்குதல்

 புதுக்கடை அருகே உள்ள பரக்காணி பகுதியில் கூலித் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

 புதுக்கடை அருகே உள்ள பரக்காணி பகுதியில் கூலித் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அம்சி, பரக்காணி பகுதியைச் சோ்ந்தவா் அனிஷ்(40)கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பாலசந்திரன்(50) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், சனிக்கிழமை பரக்கணி பகுதியில் சென்ற அனிஷை பாலசந்திரன் திடீரென தாக்கினாராம். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com