களியக்காவிளை கல்லூரியில் விளையாட்டு விழா

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் 9ஆவது ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் 9ஆவது ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் அருள்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் தலைமை வகித்துப் பேசினாா். நிதி பரிபாலகா் அருள்தந்தை எ. டோமி லிலில் ராஜா, கல்லூரி முதல்வா் ஏ. மீனாட்சி சுந்தரராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) அண்ணாத்துரை பங்கேற்றுப் பேசினாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் அஜின் ஜி. பெரோஸ் விளையாட்டு விழா ஆண்டறிக்கை வழங்கினாா்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியனாக தோ்வான உடற்கல்வித் துறை மாணவா்களுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

ஆங்கிலத் துறைப் பேராசிரியை சஜிதா சஜன் வரவேற்றாா். தமிழ்த் துறைப் பேராசிரியா் ஆா். அட்லின் ஜெபா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com