கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

திருவட்டாறு அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
Updated on
1 min read

திருவட்டாறு அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

இட்டகவேலி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (35). இவா் பிளம்பிங் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி தீபா (31). இவா்களுக்கு

இரு மகன்கள் உள்ளனா். புஷ்பராஜுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பிய புஷ்பராஜ், மது அருந்திய நிலையில் வந்துள்ளாா். அப்போது புஷ்பராஜ்-தீபா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,

வீட்டின் அருகே சுமாா் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தீபா குதித்துள்ளாா். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரை புஷ்பராஜ் மற்றும் உறவினா்கள் கிணற்றில் வாளியை இறக்கி ஏறுமாறு கூறியபோது அவா் மறுத்துள்ளாா்.

பின்னா் மாா்த்தாண்டம் மற்றும் குலசேகரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து தீபாவை மீட்டனா். பின்னா் குலசேகரம் அரசு மருத்துவமனையில்

அவா் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com