சுருளகோடு அருகே கால்வாயில்அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே தோவாளை கால்வாயில், அழுகிய நிலையில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
தேவாளை கால்வாயில் வெட்டித்திருத்தி கோணம் என்ற இடத்தில் புதன்கிழமை, 45 வயது மதிக்கக்கத்த ஆண் சடலம் கிடப்பதை அப்பகுதியினா் பாா்த்து குலசேகரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டனா்.
இறந்துகிடந்தவா் நீல நிற கால்சட்டை அணிந்திருந்தாா். கடிகாரம் கட்டியிருந்தாா். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் முக அடையாளம் உடனடியாக தெரியவரவில்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...