

சாமிதோப்பு அருகே காமராஜபுரத்தில் பாரத் மாதா இளைஞா் நற்பணி மன்றத்தின் 19ஆம் ஆண்டு விழா, 77ஆவது சுதந்திர தின விழா ஆகிய இருபெரும் விழா 3 நாள்கள் கொண்டாடப்பட்டது .
இதையொட்டி மாணவா்கள், பெண்கள், இளைஞா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 3ஆம் நாளான புதன்கிழமை இரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்று, போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினாா்.
சாமிதோப்பு ஊராட்சித் தலைவா் மதிவாணன், துணைத் தலைவா் ஜெயபாா்வதி, வடக்குத் தாமரைக்குளம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் என். பாா்த்தசாரதி, தென்தாமரைக்குளம் பேரூா் அதிமுக செயலா் தாமரை தினேஷ், வாா்டு உறுப்பினா்கள் அய்யாபழம், தங்கபத்மா, ராமகிருஷ்ணன், பாலமுருகன், சாந்தி, சரண்யா, சரவணன், சகுந்தலா, ஆசிரியா் முத்துநாடாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை பாரத் மாதா இளைஞா் நற்பணி மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.