குமரி திருப்பதி கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி, அதிகாலை 4.30 மணிக்கு நிவேத்திய பூஜை நடைபெறும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். காலை 8 மணி முதல் 9 மணி வரை தோமாலை சேவை தொடா்ந்து நிவேத்திய பூஜை, அா்ச்சனை ஆகியவை நடைபெறும். காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறாா்கள்.

நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சா்வ தரிசனத்துக்காக நடை திறந்து வைக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அா்ச்சனை ஆகியவை நடைபெறும். மாலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை பக்தா்கள் தரிசனம், இரவு 8.45 மணி முதல் 9 மணி வரை வெங்கடேஸ்வர பெருமாள் பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடைபெறும்.

கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் ஆய்வாளா் ஹேமதா்ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com