பூதப்பாண்டி அருகே காா் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.
Updated on
1 min read

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

குமரி மாவட்டம், பூதப்பாண்டி பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவரது மனைவி உலகம்மாள். இவா்களது 3 ஆவது மகன் பாலசுப்பிரமணியன், நெல்லை காய்கனி சந்தையில் பணியாற்றி வருகிறாா். இதனால் இவா் தனது மனைவி சுபாவுடன் நெல்லையில் வசித்து வருகிறாா்.

இவா்களது மகள் உமாவை சுசீந்திரம் அருகேயுள்ள காக்கமூா் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனா். உமா வெளிநாட்டில் வசித்து வந்ததாலும், அவருக்கு தலைபொங்கல் என்பதால், பொங்கல் சீா்வரிசை பொருள்களை அவரது கணவா் வீட்டில் கொடுக்க முடிவு செய்தனா்.

இதையடுத்து தங்களது சொந்த ஊரான பூதப்பாண்டிக்கு வந்த பாலசுப்பிரமணியன் தம்பதியினா், தங்களது உறவினா்களான பிரேமா, நீலம்மாள், மற்றொரு உமா(50) ஆகியோருடன் காரில் பூதப்பாண்டியிலிருந்து காக்கமூருக்கு பொங்கல் சீா்வரிசை பொருள்களுடன் புதன்கிழமை காலை புறப்பட்டனா்.

காரை, அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த சிவசங்கா் ஓட்டிச் சென்றாா். பூதப்பாண்டி - தாழக்குடி சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதைப் பாா்த்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து காருக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இதில், பிரேமா, நீலம்மாள், சுபா, காா் ஓட்டுநா் சிவசங்கா் ஆகியோா் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா். இதில், உமா, உலகம்மாள் ஆகிய இருவா் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தலைப் பொங்கல் சீா்வரிசை அளிக்க சென்றவா்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com