

நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள்குறைதீா் கூட்டத்தில், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வழங்கினாா்.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித் தொகை, முதியோா் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி199 கோரிக்கை மனுக்கள்பெறப்பட்டன.
அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீா்வுகாணுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, செண்பகராமன்புதூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த லெட்சுமணன் என்பவா் கடந்த 2021 ஆம் ஆண்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது வாரிசுதாரருக்கு, முதல்வா் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்
கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 190 மதிப்பிலான மூன்றுசக்கர சைக்கிள், வீல் சோ், மோட்டாா்பொருத்திய தையல்இயந்திரம், சி.பி. வீல் சோ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்டவருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணைஆட்சியா் தே. திருப்பதி, மாவட்ட மாற்றுத் திறன் நல அலுவலா் சிவசங்கா் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.