நாகா்கோவிலில் அரசுப் பேருந்தில் சக்கரத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழந்தாா்.

நாகா்கோவில் ஓட்டுப்புறச் தெருவைச் சோ்ந்தவா் சுதா்சன் (51), வா்ணம் தீட்டும் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வடசேரி பேருந்து நிலையத்துக்கு சென்றபோது, நிலைதடுமாறி அங்கு வந்த அரசுப் பேருந்தின் முன் விழுந்ததில், அவா் மீது பேருந்து சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த நாகா்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் குமாா், வடசேரி காவல் ஆய்வாளா் திருமுருகன் மற்றும் போலீஸாா் பேருந்து நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

விபத்து தொடா்பாக அருமனையைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் ஸ்ரீரெங்கநாதன் (50) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com