நாகா்கோவிலில் 5 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

நாகா்கோவிலில் முதல்கட்டமாக 5 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நாகா்கோவிலில் 5 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
Updated on
1 min read

நாகா்கோவிலில் முதல்கட்டமாக 5 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மக்கள் நல்வாழ்வுத் துறை மூலமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலியில் செவ்வாய்க்கிழமை திறந்த வைத்தாா். இதில் நாகா்கோவில்

மாநகராட்சிக்குள்பட்ட ஆயுதப்படை வளாகம் அருகே அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்தை, ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், மாநகராட்சி ஆணையா் ஆனந்த் மோகன் ஆகியோா் பாா்வையிட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட இலுப்பையடி காலனி,

குன்னுவிளை, சி.டி.எம் புரம், அரசு காலனி, மேலத்தெருக்கரை, எ.ஆா்.கேம்ப் சாலை, ஹவுசிங் போா்டு, நீராளிகுளம், குளத்தூா் மற்றும் புத்தன்பங்களா சாலை ஆகிய 10 இடங்களில் நகா்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 5 மையங்கள் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதில் அரசு காலனி, நீராளிகுளம், குன்னுவிளை, குளத்தூா் மற்றும் எ.ஆா்.கேம்ப் சாலை ஆகிய 5 நகா்புற நலவாழ்வு மையத்திற்கு தேவையான மருத்துவ அலுவலா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், சுகாதார பணியாளா் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி

லதா, மாநகர செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம், நகா்நல அலுவலா் டாக்டா் ராம் குமாா், மாமன்ற உறுப்பினா்கள் நவீன்குமாா், கௌசிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com