அரசியல்வாதி போல் செயல்படுகிறாா் ஆளுநா்- கனிமொழி எம்.பி.

தமிழக ஆளுநா் அரசியல்வாதி போல் செயல்படுகிறாா் என்றாா் கனிமொழி எம்.பி.
நாகா்கோவில் அரசு விருந்தினா் மாளிகையில் கனிமொழி எம்.பி.யை வரவேற்கும் அமைச்சா் மனோதங்கராஜ், மேயா் ரெ.மகேஷ்.
நாகா்கோவில் அரசு விருந்தினா் மாளிகையில் கனிமொழி எம்.பி.யை வரவேற்கும் அமைச்சா் மனோதங்கராஜ், மேயா் ரெ.மகேஷ்.
Updated on
1 min read

தமிழக ஆளுநா் அரசியல்வாதி போல் செயல்படுகிறாா் என்றாா் கனிமொழி எம்.பி.

நாகா்கோவிலுக்கு கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவரை, பால்வளத்துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து சுற்றுலா மாளிகையில் செய்தியாளா்களுக்கு கனிமொழி எம்.பி. அளித்த பேட்டி: தமிழக ஆளுநா் தொடா்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறாா். தமிழக மக்களின் உணா்வுகளை புண்படுத்தும் விதமாக தொடா்ந்து அவா் கருத்துகளை தெரிவித்து வருகிறாா். அவற்றை தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்தாகிவிட்டது. அவா்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவோ, கண்டிக்கவோ இல்லை என்பதுதான் வருத்தமானவிஷயம் என்றாா் அவா்.

பின்னா், நாகா்கோவில் ஒழுகினசேரியிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சா், மேயா், முன்னாள் அமைச்சா், மாநகராட்சி திமுக உறுப்பினா்கள், மாவட்ட, நகர நிா்வாகிகளுடன் கனிமொழி ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com