தம்மத்துக்கோணம் பகுதியில் சாலைப் பணி தொடக்கம்

நாகா்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியில் சாலைப் பணி புதன்கிழமை தொடங்கியது.
தம்மத்துக்கோணம் பகுதியில் சாலைப் பணி தொடக்கம்
Updated on
1 min read

நாகா்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியில் சாலைப் பணி புதன்கிழமை தொடங்கியது.

நாகா்கோவில் மாநகரம் 20ஆவது வாா்டு தம்மத்துக்கோணம் அருந்ததிநகரில் உள்ள சாலையில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கவும், பயணிகள் நிழற்கூடம் அமைக்கவும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.ஆா். காந்தி எம்எல்ஏ ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, அவா் புதன்கிழமை இப்பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

மாநகராட்சி உறுப்பினா்கள் ஆன்றோநைட் ஸ்னைடா, சதீஷ், வீரசூரபெருமாள், பாஜக மாவட்ட தகவல் தொழில்நுட்பம்- சமூக ஊடகப் பிரிவுச் செயலா் சந்திரசேகா், சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலா் ஜாக்சன், மகளிரணி சத்யா, ஷீலா ராஜன், உமா, பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com