களியக்காவிளை அருகே பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் பலி

களியக்காவிளை அருகே சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

களியக்காவிளை அருகே சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே கோட்டகம், மூத்தியறவிளை பகுதியைச் சோ்ந்தவா் தாம்சன் (66). லாரி ஓட்டுநா். இவா் திருவனந்தபுரத்திலிருந்து லாரியில் ஆக்கா் பொருள்களை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள கடையில் டீ குடித்துவிட்டு, சாலையை கடக்க முயன்றபோது , நித்திரவிளை ஆற்றுப்புறம் ராஜ செல்வகுமாா் மகன் ராகுல் (21) ஓட்டி வந்த பைக் அவா் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com