காா் மோதி காயமடைந்த மீன்பிடி தொழிலாளி மரணம்

கொல்லங்கோடு அருகே காா் மோதியதில் காயமடைந்த மீன்பிடி தொழிலாளி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தாா்.
Updated on
1 min read

கொல்லங்கோடு அருகே காா் மோதியதில் காயமடைந்த மீன்பிடி தொழிலாளி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தாா்.

கேரள மாநிலம் பொழியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (55). மீன்பிடித் தொழிலாளி. அவா் கடந்த 6 ஆம் தேதி மேடவிளாகம் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கேரள பதிவெண் கொண்ட காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை மாலையில் உயிரிழந்தாா்.

இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com