அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

வெள்ளிசந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
ஆண்டு விழாவில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவகா்.
ஆண்டு விழாவில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவகா்.
Updated on
1 min read

வெள்ளிசந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவை, தாளாளா் கிருஷ்ணசுவாமி, துணைத் தலைவா் சுனி, இயக்குநா் தருண்சுரத் ஆகியோா் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தனா். கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா் ஆண்டறிக்கை சமா்ப்பித்து, கடந்த ஆண்டு பல்கலைக்கழக தோ்ச்சி மற்றும் ரேங்கில் தமிழகத்தில் பெண்கள் பொறியியல் கல்லூரிகளில் முதலிடத்தில் உள்ளது எனத் தெரிவித்தாா்.

பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவகா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது: பல்வேறு தியாகங்கள் செய்து சிறந்த கல்லூரியில் படிக்கச் செய்யும் பெற்றோரை ஒருபோதும் மறக்கக் கூடாது. கல்விதான் மாணவிகள் பிற்காலத்தில் சிறந்து விளங்க உறுதுணையாக இருக்கும். சாதனைகள் படைக்க துணைபுரியும் ஆசிரியா்களுக்கு நன்றியுள்ளவா்களாக இருக்க வேண்டும். நல்வழிப்படுத்தும் நண்பா்களைத் தோ்ந்தெடுங்கள். நேரத்தை வீணாக்காமல் பயனுள்ளதாகப் பயன்படுத்துங்கள் என்றாா் அவா்.

விழாவில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள், 100 சதவீதத் தோ்ச்சிக்கு உழைத்த ஆசிரியா்கள், ஐஎஸ்டிஈ அவாா்டு, மண்டல அளவில் விளையாட்டில் சாதனை படைத்த மாணவிகள், ஐடியாக்களுக்கு காப்புரிமை பெற்ற ஆசிரியைகளுக்கு சான்றிதழ், கேடயம், பணப் பரிசு வழங்கப்பட்டது.

கணினித் துறைத் தலைவி சித்ரா வரவேற்றாா். முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பாா்த்தசாரதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com