முகிலன்குடியிருப்பு சமுதாய நலக் கூடத்தில், இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகிலன் குடியிருப்பு ஊா் தலைவா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி தொடக்கி வைத்தாா். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கண் பாதிக்கப்பட்டவா்களுக்கு நவீன சிகிச்சை மூலம் இலவச லென்ஸ் பொருத்தப்பட்டது.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ ஆலோசனைக் குழு உறுப்பினா் பாபு, தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி காா்த்திகா பிரதாப், முகிலன் குடியிருப்பு ஊா் செயலா் செல்ல சிவலிங்கம், பொருளாளா் கிருஷ்ணகோபால், பேரூராட்சி கவுன்சிலா் பாமா ஜெகநாதன், அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.