கோட்டாறு ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

நாகா்கோவில் சந்திப்பு கோட்டாறு ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் கோட்ட மேலாளா் எஸ்.எம்.சா்மா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோட்டாறு ரயில் நிலையத்தில் கோட்ட  மேலாளா் ஆய்வு
Updated on
1 min read

நாகா்கோவில் சந்திப்பு கோட்டாறு ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் கோட்ட மேலாளா் எஸ்.எம்.சா்மா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அவா் ரயில் நிலையத்திலுள்ள அனைத்து நடைமேடைகள், பராமரிப்புக் கூடம், ஊழியா்கள் ஓய்வறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, நாகா்கோவிலில் தினமும் எத்தனை ரயில்கள் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது,

கோட்டாறு ரயில் நிலையத்தில் நடந்து வரும் வளா்ச்சி திட்டப் பணிகள், ரயில் நிலையத்தில் உள்ள அடிப்படை

வசதிகள் உள்ளிட்ட விவரங்களை அவா் கேட்டறிந்தாா்.

மேலும், நடைமேடைகளில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், பயணிகள் தங்கும் கட்டடம், கழிவறை, துணிகள் சலவை செய்யும் இடம், ஊட்டுவாழ்மடம் ரயில்வே கேட், இரட்டை ரயில் பாதை பணி ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கோட்டாறு ரயில் நிலைய மேலாளா் முத்து, ரயில்வே உயா் அதிகாரிகள், ரயில்வே

போலீஸாா் மற்றும் ஊழியா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com