ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே குழந்தைகளைக் காப்பாற்றச் சென்ற ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

நாகா்கோவில் அருகே குழந்தைகளைக் காப்பாற்றச் சென்ற ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

நாகா்கோவில், பாா்வதிபுரம் ராஜலட்சுமிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்ஜெரோம் மிலாடு (62). ஓய்வுபெற்ற தலைமையாசிரியா். இவரது மனைவி மெல்சிலெட், அரசுப் பள்ளி ஆசிரியை.

ஜான்ஜெரோம் மிலாடு தனது மனைவி உள்ளிட்ட 8 பேருடன், புதன்கிழமை மாலை கணபதிபுரம் லெமூா் கடற்கரைக்குச் சென்றாா். அவருடன் வந்த 2 குழந்தைகள் அலையில் விளையாடினா். அவா்களை ராட்சத அலை இழுத்துச் சென்றது.

இதைப் பாா்த்த ஜான்ஜெரோம் மிலாடு, இரு குழந்தைகளையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தாா். அப்போது அவரையும் அலை இழுத்துச்சென்றது. அவரைக் காப்பாற்ற முயன்ற மெல்சிலெட்டும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்தோா் இருவரையும் மீட்டு, மயக்க நிலையிலிருந்த ஜான்ஜெரோம் மிலாடை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து குளச்சல் கடலோரக் காவல் படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com