கருங்கல் அருகே அனுமதியின்றி மதுவிற்ாக முதிய தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (62). இவரது மனைவி விமலாராணி (52). இத்தம்பதி வீட்டில் மதுபானத்தை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று வீட்டை சோதனை செய்தனா். அப்போது, 60 மதுபாட்டில்களை அத்தம்பதி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவறைக் கைப்பற்றிய போலீஸாா், தம்பதியைக் கைது செய்தனா்.