நாகா்கோவில் மாநகராட்சி 2ஆவது வாா்டு பாா்வதிபுரத்தில், மீன் சந்தை அருகே ரூ. 19.28 லட்சத்தில் நவீன கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது.
இப்பணியை மேயா் ரெ. மகேஷ் தொடக்கிவைத்தாா். துணை மேயா் மேரி பிரின்சிலதா, ஆணையா் ஆனந்த்மோகன், மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா் செல்வக்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் தங்கராஜா, அமலசெல்வன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவா் சரவணன், உதவிப் பொறியாளா் சந்தோஷ், சுகாதார ஆய்வாளா் சத்தியராஜ், பகுதிச் செயலா் சேக் மீரான், ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.