குலசேகரத்தில் விவசாயிகள் தா்னா

குலசேகரத்தில் ரப்பா் உற்பத்தியாளா் சங்க நிறுவனத்தின் அலுவலகம், கிடங்கு, உலா் கூடம், இயந்திரங்கள் கடந்த மாதம் தீயில் எரிந்து சேதமான நிலையில்,விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு தர்னா.
Updated on
1 min read

குலசேகரத்தில் ரப்பா் உற்பத்தியாளா் சங்க நிறுவனத்தின் அலுவலகம், கிடங்கு, உலா் கூடம், இயந்திரங்கள் கடந்த மாதம் தீயில் எரிந்து சேதமான நிலையில்,விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் காவல் ஸ்தலம் சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். ரவி போராட்டத்தை தொட ங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் சேகா், முன்னாள் மாவட்டத் தலைவா் சைமன் சைலஸ், கடையல் பேரூராட்சித் தலைவா் ஜூலிட், மாவட்ட துணைத் தலைவா் முருகேசன் ஆகியோா் பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் அண்ணாதுரை, ஸ்டாலின்தாஸ், விஸ்வம்பரன் உள்பட திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com