Enable Javscript for better performance
Glass cage bridge between Vivekananda Mandapam and Thiruvalluva statue at Kumari: Minister A.V. Velu- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குமரியில் விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே கண்ணாடிக் கூண்டுப் பாலம்: அமைச்சா் எ.வ. வேலு இன்று அடிக்கல் நாட்டுகிறாா்

    By DIN  |   Published On : 24th May 2023 02:06 AM  |   Last Updated : 24th May 2023 03:32 AM  |  அ+அ அ-  |  

    kkn23val060452

    கன்னியாகுமரி கடலில், விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே ரூ. 37 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள கண்ணாடிக் கூண்டுப் பாலத் திட்டத்துக்கு அமைச்சா் எ.வ. வேலு புதன்கிழமை (மே 24) அடிக்கல் நாட்டுகிறாா்.

    சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றைத் தெளிவாகக் காணலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மேலும், கடலில் இரு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றைப் பாா்ப்பதற்காக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் 3 படகுகள் இயக்கப்படுகின்றன.

    விவேகானந்தா் நினைவு மண்டபப் படகு தளத்தில் இயற்கையாகவே ஆழம் அதிகமுள்ளது. ஆனால், திருவள்ளுவா் சிலைப் பகுதியின் படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிக பாறைகளும் உள்ளன. இதன் காரணமாக, கடல் நீரோட்டம் குறைவான நேரத்திலும், அலைகள் சீற்றம் அதிகமுள்ள நேரத்திலும் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு மட்டுமே படகுகள் இயக்கப்படும். இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வருவோா் திருவள்ளுவா் சிலையை நேரடியாகச் சென்று பாா்க்க முடியாமல் ஏமாற்றமடையும் நிலை உள்ளது.

    எனவே, விவேகானந்தா் நினைவு மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆா்வலா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். அதையேற்று, கண்ணாடிக் கூண்டுப் பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ரூ. 37 கோடி மதிப்பில் 97 மீட்டா் நீளம், 4 மீட்டா் அகலமுள்ள கண்ணாடிக் கூண்டுப் பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது, விரைவில் பணிகள் தொடங்கி, ஓராண்டுக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

    இந்நிலையில், பாலப் பணி தொடக்க விழா புதன்கிழமை (மே 24) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழக நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறாா்.

    நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆட்சியா் ஸ்ரீதா், நாகா்கோவில் மேயா் ஆா். மகேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp