திருவட்டாறு வட்டத்திற்குள்பட்ட 13 கிராம நிா்வாக அலுவலகத்திற்குள்பட்ட வருவாய் தீா்வாயம், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. பட்டா உட்பிரிவு, நில வரி வசூல், ஆக்கிரமிப்பு இனங்கள், சான்றுகள் நிலுவை மற்றும் இதர வருவாய்த் துறை சாா்ந்த பணிகளின் மீதான தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் உசூா் மேலாளா் சுப்பிரமணியன், திருவட்டாறு தாசில்தாா் தாஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.