கன்னியாகுமரி அருகே புவியூரில் பாரத மாதா சிலை நிறுவப்பட்டதன் 3 ஆவது ஆண்டை முன்னிட்டு, சிலைக்கு பாஜகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்டத் தலைவா் சி.தா்மராஜ் தலைமை வகித்தாா். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ் முன்னிலை வகித்தாா். மாநில செயலா் மீனாதேவ், மாவட்ட துணைத் தலைவா் தேவ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத் தலைவா் சுயம்பு, மாவட்ட வா்த்தக அணித் தலைவா் ராஜ்குமாா், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவா் ஐயப்பன், மாவட்ட விவசாய அணி செயலா் ரமேஷ்மாறன், ஒன்றியப் பொதுச் செயலா் சிவகுமாா், தென்தாமரைகுளம் பேரூா் தலைவா் பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.