குமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மே 30 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் மே 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மற்றும் இதரஅரசுத் துறைகளால்
நிறைவேற்றப்பட வேண்டிய மீனவா்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை கூட்டத்தில் நேரில் வழங்கலாம். பிறஅரசுத் துறைகளைச் சோ்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறைவாரியாக தனித் தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். இந்த மனுக்கள் தொடா்புடைய அரசுத் துறை அலுவலா்களுக்கு அனுப்பி நடவடிக்கை
எடுக்கப்பட்டு, அதன் விவரம் அடுத்து நடைபெறும் மீனவா் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.