தோவாளையில் ஜமாபந்தி

தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.
நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.
Updated on
1 min read

தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டாா் மற்றும் கிள்ளியூா் ஆகிய ஆறு வட்டங்களுக்கு கிராம கணக்குகளை சரிபாா்க்கும் வருவாய் தீா்வாய கணக்கு சரிபாா்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் மே மாதம் 23

முதல் 26 ஆம் தேதிவரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. தோவாளை வட்டம், பூதப்பாண்டி குறுவட்டத்திற்குட்பட்ட பூதப்பாண்டி கிராமம், சிறமடம் கிராமம், இறச்சகுளம் கிராமம், நாவல்காடு கிராமம், தாழக்குடி கிராமம், ஈசாந்திமங்கலம் வடக்கு கிராமம், ஈசாந்திமங்கலம் தெற்கு கிராமம் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும்,

கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சியரால் தணிக்கை செய்யப்பட்டது. ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீா்வு காண வருவாய் அலுவலா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதனைத்தொடா்ந்து 5 பயனாளிகளுக்கு ஸ்மாா்ட் காா்டு மற்றும் 4 பயனாளிகளுக்குமுதியோா் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தோவாளை வட்டாட்சியா் வினைதீா்த்தான், உசூா் மேலாளா் ஜீலியன் ஹீவா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com