ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிக்கு ரூ. 1.10 கோடி ஒதுக்கீடு: எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தகவல்

ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடங்கள் கட்ட ரூ. 1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிக்கு ரூ. 1.10 கோடி ஒதுக்கீடு: எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தகவல்
Updated on
1 min read

ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடங்கள் கட்ட ரூ. 1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவரும், கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிள்ளியூா் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆறுதேசம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என முதல்வா், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததுடன், தமிழக பேரவை கூட்டத் தொடரிலும் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அமைச்சா் ம. சுப்பிரமணியனை நேரடியாக அழைத்து வந்து ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் ரூ. 1.10 கோடியில் ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடங்கள் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக முதல்வா் மற்றும் துறை அமைச்சா், அதிகாரிகளுக்கு தொகுதி மக்கள் சாா்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுமானப் பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com