கப்பியறை பேரூராட்சியில் கல் குவாரியை மூடுவதற்கு ஆட்சியா் உத்தரவு

கருங்கல் அருகே கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட காடுவெட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டுவந்த கல் குவாரியை மூடுவதற்கு ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் உத்தரவிட்டுள்ளாா்.
Updated on
1 min read

கருங்கல் அருகே கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட காடுவெட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டுவந்த கல் குவாரியை மூடுவதற்கு ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் உத்தரவிட்டுள்ளாா்.

காடுவெட்டி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்தக் குவாரியால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்புள்ளாகினவாம். இதனால், குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்திஅப்பகுதியினரும், அனைத்துக் கட்சியினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினா். ஆனால் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் அனிஷா கிளாடிஸ் தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலா்கள் தொடா்ந்து 7 நாள்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா். கெளசிக் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. 15 நாள்களில் குவாரியை ஆய்வு செய்து ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பித்து, விதிமீறல் இருந்தால் குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி, குவாரியை சாா்ஆட்சியா் ஆய்வு செய்து, ஆட்சியரிடம் அறிக்கை சமா்ப்பித்தாா். இதையடுத்து, குவாரியை தற்காலிகமாக மூடுவதற்கு ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com