

கன்னியாகுமரி: கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் திங்கள்கிழமை பூக்கள் தினம் கொண்டாடப்பட்டது .
இதையொட்டி, 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவா்- மாணவிகள் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடை, கிரீடம் அணிந்து வந்தனா். விழாவில் நடனம், பேஷன் ஷோ உள்ளிட்டவை நடைபெற்றன.
பள்ளி முதல்வா் ஜின்ஸ் ஜோசப் இயற்கை, பூக்களின் சிறப்புகள் குறித்துப் பேசினாா். தாளாளா் ராபின்சன், துணை முதல்வா் ஆரோக்கியம், ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.