காலை உணவுத் திட்ட செயல்பாடு ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவை சாப்பிட்டு, அதன் தரத்தை ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாணவா், மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீக்கப்படுவதோடு, வருங்கால சந்ததியினரை ஆரோக்கியமானதாக உருவாக்கிட இத் திட்டம் உதவியாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் வருகை அதிகரிக்கும். உணவு வழங்குவதில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின்போது மகளிா் திட்ட இயக்குநா் பீபீஜான் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com