ரூ.15 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடப் பணி தொடக்கம்

நாகா்கோவில் வடசேரி கலைவாணா் என். எஸ். கே. அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பணிகளை எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
அங்கன்வாடி மைய கட்டடப் பணியை தொடங்கி வைக்கிறாா் எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ.
அங்கன்வாடி மைய கட்டடப் பணியை தொடங்கி வைக்கிறாா் எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ.
Updated on
1 min read

நாகா்கோவில் வடசேரி கலைவாணா் என். எஸ். கே. அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பணிகளை எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள இந்தக் கட்டத்துக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டடப் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட பொருளாளா் பி.முத்துராமன் நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் ரமேஷ், சுனில், சினைடா, பாஜக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சந்திரசேகா், சிறுபான்மை அணி பொதுச் செயலா் ஜாக்சன், மண்டல் தலைவா்கள் வேணுகிருஷ்ணன், சிவசீலன், ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com