

நாகா்கோவில்: புகாா் மனு மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டிப்பதாகக் கூறி, நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மனு கொடுக்க வந்திருந்தோரை போலீஸாா் சோதனை செய்து அலுவலகத்துக்குள் அனுமதித்தனா். அப்போது, மனுவுடன் வந்த பெண் திடீரென தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீஸாா் அப்புறப்படுத்த முயன்றனா்.
அப்போது அவா், தனது வாழைத் தோட்டம் தொடா்பாக கொடுத்த புகாா் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதாகக் கூறினாா். அவரை போலீஸாா் சமரசப்படுத்தி அழைத்துச் சென்றனா். விசாரணையில், அவா் மாங்கரை அருகே கல்லுவிளை காட்டுவிளையைச் சோ்ந்த ராஜன் மனைவி ராதிகாகுமாரி எனத் தெரியவந்தது.
அவா் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்க வந்த மனு: பாலூா் தேசம் பகுதியில் எங்களது நிலத்தில் 350 வாழைகள் பயிரிட்டுள்ளோம். எனது கணவரின் தம்பி வின்சென்ட், அவரது மனைவி ஜெபராணி ஆகியோா் 150 வாழைக்குலைகளை வெட்டி சேதப்படுத்தினா். இதுகுறித்து நானும், கணவரின் சகோதரி லிசியும் கேட்டபோது, வின்சென்ட் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுதொடா்பாக கருங்கல் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் புகாா் அளித்தேன். வட்டாட்சியா், ஆட்சியா் அலுவலகங்களிலும் புகாா் தெரிவித்தும் பலனில்லை. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ஆன்லைனில் புகாா் அளித்தேன். அதன் மீதும் கடந்த 4 மாதங்களாக நடவடிக்கை இல்லை. எனவே, வின்சென்ட் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு இழப்பீடாக ஒன்றரை லட்ச ரூபாய் வழங்க உத்தரவிடவேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.