கருங்கல் அருகே உள்ள சடையன்குழி பகுதியில் திராவகம் குடித்து முதியவா் தற்கொலைசெய்து கொண்டாா்.
சடையன்குழி பகுதியை சோ்ந்தவா் செல்லசுவாமி(70). ஒராண்டுக்கு முன் தனது மனைவி இறந்த நிலையில், அவா் சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில் அவா் வீட்டில் திராவகத்தை குடித்து புதன்கிழமை மயங்கி விழுந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.