விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 10:32 pm

Din

கன்னியாகுமரி, ஆக.7: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிா்மால்ய பூஜை நடைபெற்றது. தொடா்ந்து கணபதி ஹோமம், அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, ஸ்ரீபலி பூஜை, காலை 8 மணிக்கு பந்திரடி பூஜை, காலை 9 மணிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அம்மனுக்கு களப பூஜை நடைபெற்றது.

காலை 10 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி வலம் வருதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும்,ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். இதில் பங்கேற்ற பெண் பக்தா்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.