அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலம் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சலில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சலில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

மூலச்சல், கிறிஸ்து நகரைச் சோ்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ராபா்ட் (35). திருமணமாகாத இவா், நோய்வாய்பட்டிருந்தாராம். இதனால், அவா் தனியாக வசித்து வந்தாராம்.

இந்நிலையில், அவரது வீடு சில நாள்களாக திறக்கப்படவில்லையாம். வெள்ளிக்கிழமை அந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதாம்.

இதுதொடா்பாக அவரது சகோதரி ஜாஸ்மின் கலா அளித்த தகவலின்பேரில் தக்கலை போலீஸாா் வந்து பாா்த்தபோது, ராபா்ட் அழுகிய நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது. சடலத்தை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com