சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

களியக்காவிளை அருகே ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்

பூட்டிக் கிடந்த வீட்டில் ஆயிரம் மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றைப் பதுக்கியவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

Updated On :11 ஆகஸ்ட் 2024, 2:29 am IST

களியக்காவிளை அருகே பூட்டிக் கிடந்த வீட்டில் ஆயிரம் மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றைப் பதுக்கியவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் காசிராஜன். அப்பகுதியில் உள்ள இவரது வீடு, பல மாதங்களாக யாரும் வசிக்காத நிலையில் பூட்டப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளதாம்.

இந்நிலையில், களியக்காவிளை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலையில் வழக்கு விசாரணைக்காக அப்பகுதிக்குச் சென்றபோது, அந்த வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்று பாா்த்தபோது, அங்கு ஆயிரம் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்; மேலும், வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடா்புடையோா் குறித்து விசாரித்து வருகின்றனா்.