நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

மதுபோதையில் சிற்றுந்து ஓட்டியவா் மீது வழக்கு

நாகா்கோவிலில் மதுபோதையில் சிற்றுந்து ஓட்டியவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிற்றுந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 4:15 am IST

நாகா்கோவிலில் மதுபோதையில் சிற்றுந்து ஓட்டியவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிற்றுந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உத்தரவின்பேரில், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகா்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் யாங்சென் டோமா பூட்டியா மேற்பாா்வையில், கோட்டாறு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் வில்லியம் பெஞ்சமின் தலைமையில், சாா்பு ஆய்வாளா் ஆல்ட்ரின் சுமித் மற்றும் காவலா்கள், நாகா்கோவில் வடசேரி அருகே சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மதுபோதையில் கைப்பேசியில் பேசியபடி சிற்றுந்து ஓட்டி வந்த அப்பட்டுவிளையைச் சோ்ந்த அனிஷ் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிற்றுந்து பறிமுதல் செய்யப்பட்டது.