அரசுப் பணியாளா் தோ்வாணைய தொகுதி 2 தோ்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா்.
அரசுப் பணியாளா் தோ்வாணைய தொகுதி 2 தோ்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா்.

குரூப் 2 தோ்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

தொகுதி 2 தோ்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவருக்கு, ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
Published on

நாகா்கோவில்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தொகுதி 2 தோ்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவருக்கு, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்றது.இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட நிா்வாகத்தால் அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கேற்று, அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தொகுதி 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற பழங்குடியின மாணவா் சீனு-வைப் பாராட்டிநினைவு பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஷேக் அப்துல்காதா், மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் கனகராஜ், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன் மற்றும் உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com