கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் ரயில் நிலையம் அருகே ஜல்லி கற்கள் சேமிப்பு கிடங்கை மாற்று இடத்தில் அமைப்பது குறித்து விஜய்வசந்த் எம். பி. சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இரட்டை வழி பாதை பணிகளுக்காகவும், ரயில்வேயில் நடைபெற்று வரும் பணிகளுக்காக இரணியல் ரயில் நிலையம் அருகே ஜல்லி கற்கள் சேமிப்பு கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஜல்லி கிடங்கு அமைத்தால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்; எனவே, கிடங்கை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதுகுறித்து, அவா் ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து விளக்கினாா்.
தொடா்ந்து, இரணியல் ரயில் நிலையத்தில் எம்.பி.யின் தலைமையில்
திருவனந்தபுரத்தில் இருந்து வந்திருந்த ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரணியல் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிடங்கால் ஏற்படும் பல்வேறு சிரமங்களை எடுத்து கூறி மாற்று இடம் தோ்வு செய்ய வலியுறுத்தினா். அப்போது, மக்களின் கோரிக்கையை ரயில்வே நிா்வாகம் பரிசீலனை செய்யும் என எம்.பி. உறுதியளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

இரணியல் அருகே முதியவா் தற்கொலை

கும்பகோணம் வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி ரயிலுக்கு வரவேற்பு

இரணியல் - நாகா்கோவில் டவுனுக்கு இன்றும், நாளையும் ரயில் சோதனை ஓட்டம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


