தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

குமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

News image

கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்.

Updated On :4 அக்டோபர் 2024, 4:32 am IST

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து காலை 7.45 மணிக்கு மேல் காலை 8.45 மணிக்குள் அம்மன் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா.தாமரை தினேஷ், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றத் தலைவா் சி.முத்துக்குமாா், கன்னியாகுமரி பேரூராட்சி பாஜக கவுன்சிலா் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலா் பி.பகவதியப்பன் மற்றும் திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

விழா நாள்களில் அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, பக்தி இன்னிசை, அம்மன் வாகன பவனி ஆகியவை நடைபெறும். 10ஆம் நாள் திருவிழாவான அக்டோபா் 12ஆம் தேதி அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.