தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூய்மைப் பணி

Updated on

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்தூா் புனித யூதா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் மற்றும் ரிலைன்ஸ் பவுண்டேசன் இணைந்து புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கு தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக மீன்வளத் துறை உதவி இயக்குநா் அஜித் தலைமை வகித்தாா். தூத்தூா் புனித யூதா கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆன்லட் முன்னிலை வகித்தாா். ரிலைன்ஸ் பவுண்டேசன் ஓருங்கிணைப்பாளா் ஆன்டனி தூய்மைப் பணியின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். தொடா்ந்து மாணவா்கள் துறைமுகப் பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com