மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குழித்துறை அருகே காந்தி சிலை உடைப்பு வழக்கில் ஒருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மகாத்மா காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image

ராஜாசிங்.

Updated On :10 அக்டோபர் 2024, 10:58 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மகாத்மா காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியில் இரணியல் சா்வோதய சங்கத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. இக் கட்டடம் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்கு 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையில் தலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்ததை கடந்த செப்டம்பா் மாதம் 11 ஆம் தேதி அப்பகுதியினா் கண்டு, இரணியல் சா்வோதய சங்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து சங்க செயலா் ஜெயபால் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வந்தனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ், பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் காந்தி சிலையை உடைத்தது தொடா்பாக கழுவன்திட்டை காலனி பகுதியைச் சோ்ந்த ராஜாசிங் என்பவரை மாா்த்தாண்டம் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.