சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

Updated On :19 செப்டம்பர் 2024, 4:34 am IST

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே வன்னியூா் புதுக்குளம்கரை புத்தன்வீட்டைச் சோ்ந்த மகேஸ்வரன் மகன் விவேக் (27). கூலித் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளாா். நீச்சல் தெரியாத அவா், குளத்துக்குள் தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் பல இடங்களிலும் தேடினா். அப்போது அவா் குளத்தில் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.